world

img

நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து  

நார்வேயில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.  

நார்வேயின் பேடோ நகரின் தெற்கில் உள்ள பெயார்னில் நேட்டோ கூட்டுப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.  

மேலும் இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மோசமான வானிலையே விபத்துக்கான காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நார்வேயில் ஆண்டுதோறும் நேட்டோ படையினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு 27 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 துருப்புக்கள், 220 விமானங்கள் மற்றும் 50 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேட்டோ உறுப்பினர் அல்லாத பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் பங்கேற்றுள்ளன. மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முடிவடைகின்றன.

 

;